அணைக்கிறானா?
இல்லை
நெறிக்கிறானா?
குலுக்கிறானா?
இல்லை
முறிக்கிறானா?
என் மீது படிந்த
தூசியைத்
தட்டுகிறானா?
இல்லை
என்னிடம்
உள்ளதை தட்டிப் பறிக்க
முனைகிறானா?
கனிவுடன்
என்னைப் பார்கிறானா?
இல்லை
பகைமை கண் கொண்டு
என்னை வெறிக்கிறானா?
ஆபத்தில் நான்
மாட்டக் கூடாதென
வாஞ்சையுடன்
என்னை மறிக்கிறானா?
இல்லை
நான் நடந்துப் போகும்
உரிமையை வஞ்சனையுடன்
பறிக்கிறானா?
என்மீது அன்பு மழையை
பொழிகிறானா?
இல்லை
எரிக்கும்
நச்சு திரவத்தை
என்மீது வீசிகிறானா?
என்னைப் பார்த்து
சிரிக்கிறானா?
இல்லை
என்மீது
கோபம் கொண்டு
பல்லைக் கடிக்கிறானா?
ஒன்று பட்டு வாழ
அழைக்கிறானா?
இல்லை
என்னை கொன்று போட்டு
தான் வாழ
நினைக்கிறானா?
இவன்
என் சக மனுஷனா?
இல்லை
பகை மனுஷனா?