Saturday, October 21, 2006

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி!

ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-

அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி....
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!

"எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்" பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்....

பேசும் வார்த்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.

"ஏ.ஜே" எனும்
மறையாத ஆளுமைமிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!

நன்றிகள்-மல்லிகை-நவம்பர்.2006

2 comments:

விருபா - Viruba said...

மேமன்கவி அவர்களே, உங்களை வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

Kanags said...

மேமன்கவி அவர்களுக்கு வணக்கம். வலைப்பதிவுலகில் நுழைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தாங்கள் எனது பதிவுக்கு வருகைதந்தமைக்கு நன்றிகள். ஏஜே அவர்களைப்பற்றிய தங்களின் கவிதையை எனது பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தீர்கள். அதனைத் தனிப்பதிவாக எனது பதிவிலும் இட்டிருக்கிறேன்.

தொடர்ந்து உங்கள் பதிவுகளைத் தாருங்கள்.